Tuesday, April 2, 2013

டேய் அண்ணா...

ஓயாமல் சண்டை போட்ட நாட்கள்,,
சலிக்காமல் செய்த சேவைகள் ,,
கை பிடித்து நடந்த தருணங்கள்,,
உன் முதல் சம்பளத்தில் எனக்கு வாங்கிய புடவை,,
என் பிடித்தத்தில் உனக்கு வாங்கிய கை கடிகாரம்,,
சிறு சண்டையை சமாதனம் செய்ய நீ அனுப்பிய குறுந்தகவல்கள்,,
வேலை தேடி நீ வேறு ஊர் செல்கையில் நான் சிந்திய கண்ணீர் துளிகள்,,
தொலைவில் இருந்தும் தினம் பல முறை அழைத்து "நல்லா இருக்கியா" என்று விசாரித்தது,,
பரஸ்பரம் புரிந்து கொண்டு என் காதலை சேர்த்து வைக்க நீ போராடியது,, 

இவை அனைத்தும் இனி கிடைக்காது என்று நான் ஏங்கி அழ, 
"முதலில் கல்யாணம் முடித்து உன்னை அனுப்பி வைக்க வேண்டும்" என்று எப்படித்தான் உன்னால் சொல்ல முடிகிறதோ !!

Sunday, March 31, 2013

இன்னும் எத்தனை காலம் தான்.. !!

குடும்ப கௌரவத்தை சீர் அழித்து விட்டாய்..
 கொதித்தார் அப்பா...

அவன் வேண்டாம் என்று சொல்லி விடம்மா...
கதறினால் அம்மா..

ஏன் என்னிடம் கூட சொல்லவில்லை... 
புலம்பினான் அண்ணன்..

விட்டுத்தள்ளு... இனிமேல் படிப்பில் கவனம் செலுத்து..
மிரட்டினார்கள் தோழிகள்..

கொஞ்சம் நாள் போகட்டும்.. பேசி பார்க்கலாம்... 
தேற்றினார்கள் நண்பர்கள்...

அவள் அப்படித்தான் பண்ணுவாள் என்று எதிர்பார்த்தோம்..
கேலி பேசினார்கள் உறவினர்கள்...

அப்படி என்ன தப்பு செய்தேன் என்று நான் விழிக்க,
நேற்று இரவு தாமதம் ஆகியதால், இருச்சக்கர வாகனத்தில், நண்பன் இறக்கி விட்டது ஞாபகம் வந்தது...
தலையில் அடித்து கொண்டேன்...!!!